22 629eb027eea3e
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் கொலைக் கலாசாரம்: துப்பாக்கிச்சூடு நடக்கும் நேரத்தையும் இடத்தையும் ஊகிக்க முடியவில்லை – சஜித் பிரேமதாச

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, நாட்டில் எந்த நேரத்தில், எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார்.

அவர் கூறியதாவது, மக்களை வாழ வைப்பதே ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. இந்த வருடம் மட்டும் அதிக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளன. பொது மக்கள் தின நடவடிக்கைகள் நடைபெற்று வரும்போதே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்கள் தினம் நடத்தப்படுகிறது.

இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டம் இல்லை. இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் ஒருவர் பொது மக்கள் தின நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடப்பதற்கு முன்னர், தனக்கு உயிராபத்து உள்ளது, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

“இன்று சமூகத்தில் எங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...

world 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தங்கல்லையில் பரபரப்பு: போதையில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்ட நபர் கைது

இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள தங்கல்லை, குடவெல்ல பகுதியில் நேற்று (மே 04) மாலை நபர் ஒருவர்...

world 24
செய்திகள்இந்தியா

தமிழகத் தேர்தலில் தவெக சாதனை வெற்றி: மே 7-ல் முதல்வராகப் பதவியேற்கிறார் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின்...

world 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை பெறவில்லை: அமைச்சர் நலிந்த ஜயதிஸ விளக்கம்

இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தனது பதவிக்காலத்தின் எந்தவொரு கட்டத்திலும் இரட்டைக்...