22 629eb027eea3e
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் கொலைக் கலாசாரம்: துப்பாக்கிச்சூடு நடக்கும் நேரத்தையும் இடத்தையும் ஊகிக்க முடியவில்லை – சஜித் பிரேமதாச

Share

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, நாட்டில் எந்த நேரத்தில், எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலை உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (அக்டோபர் 25) நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு பேசினார்.

அவர் கூறியதாவது, மக்களை வாழ வைப்பதே ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. இந்த வருடம் மட்டும் அதிக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களும் அதிகரித்துள்ளன. பொது மக்கள் தின நடவடிக்கைகள் நடைபெற்று வரும்போதே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்கள் தினம் நடத்தப்படுகிறது.

இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டம் இல்லை. இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் ஒருவர் பொது மக்கள் தின நடவடிக்கையின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடப்பதற்கு முன்னர், தனக்கு உயிராபத்து உள்ளது, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். ஆனால் காவல்துறையினர் எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை.

“இன்று சமூகத்தில் எங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...