f9eb4180 3a60 11ee b8bd 41d4a5d9331d.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

நல்லிணக்கம் குழப்பப்படலாம்: பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் – எம்.பி. ஸ்ரீநேசன் வலியுறுத்தல்!

Share

கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கான நடவடிக்கையை உடன் நிறுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்தச் செயற்பாடு நிறுத்தப்படாவிட்டால் அது ‘நல்லிணக்க அல்லது மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சூழலைக் குழப்பக் கூடியதாக இருக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலங்களை அமைப்பதன் மூலம் இனங்களுக்கிடையேயான அமைதி பாதிக்கப்படலாம் என்ற கவலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...