467dcdf0 dsgdfgdfh
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பு கோருவது ஒருநாட்டையே!! – சாணக்கியன்!!

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகளையே கோருகின்றது – என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான விடயங்களையே கோரிவருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல விடயங்களே எமக்கு தேவை. மாறாக நாட்டை பிளவுபடுத்தி தருமாறு கேட்கவில்லை.

நீதி அமைச்சர் வடக்கு மாகாணம் வருவதால் பிரச்சினை தீரப்போவதில்லை. சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமானால் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்.

அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துங்கள். அதனை விடுத்து அழுத்தங்களை சமாளிப்பதற்கான நாடகங்கள் வேண்டாம்.” – என்றார்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...