images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

Share

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று மாலை பணிக்குத் திரும்பிய குறித்த கான்ஸ்டபிள், தனது கடமைக்கான (Service) துப்பாக்கியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தபோது தற்செயலாக அது இயங்கியுள்ளது.

இதன்போது பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் அவரது ஒரு காலில் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த கான்ஸ்டபிள் உடனடியாக பொலிஸ் வாகனம் மூலம் பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது காயங்கள் பாரதூரமானவை அல்ல என்றும், தற்போது அவர் சீரான உடல்நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...

25 693eb9bc28958
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டாலும் ஆபத்து குறையவில்லை: மண்சரிவு பகுதிகளில் வசிப்போருக்கு NBRO கடும் எச்சரிக்கை!

மண்சரிவு அபாயத்தைக் குறிக்கும் ‘சிவப்பு எச்சரிக்கைகள்’ (Red Alerts) சில பகுதிகளில் நீக்கப்பட்ட போதிலும், அந்த...