நாடு திரும்பினர் 8
அரசியல்இலங்கைசெய்திகள்

உக்ரைனில் இலங்கையர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சு!!

Share

உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 42 இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களில் எழுவர் மாணவர்கள் ஆவர்.

அத்துடன், உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை தூதரகமொன்று உக்ரேனில் இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரேனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை துரித கதியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...