9 24
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

Share

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் முன்வைத்தேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் அவ்வாறு செய்த அரசியல்வாதிகள் அதிகம். இன்னும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

சில பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஆகியோரும் இந்த நிதியில் பணம் பெற்றுள்ளனர்.விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவேன்.”என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...