9 24
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

Share

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் முன்வைத்தேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் அவ்வாறு செய்த அரசியல்வாதிகள் அதிகம். இன்னும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

சில பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஆகியோரும் இந்த நிதியில் பணம் பெற்றுள்ளனர்.விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவேன்.”என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...