24 6629ac491adc8
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

Share

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டதாகவும், தலா 1500 ரூபா கட்டணமாக பெற்று பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாகொல பிரதேசத்தில் ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியில் இளைஞர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயத்துறையில் பரீட்சையின்றி உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல்வாதி கூறியதாகவும் ஒரு மாவட்டத்திதிற்கு ஐம்பது வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு சென்ற ஒவ்வொரு இளைஞனும் இந்த அரசியல்வாதியிடம் பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு இளைஞன் கூட கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பப்படாததால் செலவு செய்த பணத்தை மீண்டும் பெறுவதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் குழு கவலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...