24 6629ac491adc8
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

Share

தென்னிலங்கை அரசியல்வாதியின் மோசமான செயல்

கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டதாகவும், தலா 1500 ரூபா கட்டணமாக பெற்று பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாகொல பிரதேசத்தில் ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியில் இளைஞர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயத்துறையில் பரீட்சையின்றி உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல்வாதி கூறியதாகவும் ஒரு மாவட்டத்திதிற்கு ஐம்பது வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பயிற்சிக்கு சென்ற ஒவ்வொரு இளைஞனும் இந்த அரசியல்வாதியிடம் பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு இளைஞன் கூட கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பப்படாததால் செலவு செய்த பணத்தை மீண்டும் பெறுவதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் குழு கவலை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...