இலங்கைசெய்திகள்

பாதாள உலகத்திற்கு அரசியல் ஆதரவு! அநுர தரப்பு வெளிப்படை

Share
6 51
Share

பாதாள உலகக் குழுக்களால் நடத்தப்படும் கொலைகள் விரைவில் நிறுத்தப்படும் என்றும், அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்தால், பாதாள உலகத்தை அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“பாதாள உலகம் அரசியல் ஆதரவின் பேரில் பிறந்தது. அதன் மூலமாக தற்போது பராமரிக்கப்படுகிறது, மற்றும் கட்டமைக்கப்படுகிறது.

நமது நாடு இப்போது பாதாள உலகப் பிரச்சினையுடன் போராடி வருகிறது.

எனவே பாதாள உலகப் பிரச்சினையை பொலிஸாரின் நடவடிக்கையால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.

பதில் என்ன என்பதை நாங்கள் மக்களுக்கு சொல்வோம். ஆனால் இப்போது நாங்கள் பொலிஸ் நடவடிக்கையில் தலையிடுகிறோம்.

இதனால் பாதாள உலகத்தால் அரசாங்கத்துடன் தொடர்பை தற்போது ஏற்படுத்த முடியாது உள்ளது. எனவே இப்போது பாதாள உலகம் அரசாங்க ஆதரவு இன்றி காணப்படுகிறது.

பாதாள உலகுடன் தொடர்புடைய தரப்பினர் தயவுசெய்து அதனை நிறுத்தி தங்கள் வாழ்க்கையை சாதாரணமாக கட்டியெழுப்ப கடினமாக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இல்லையெனில், சட்ட வரம்புகளுக்குள் இதை கணிசமான அளவிற்கு அடக்குவதற்குத் தேவையானதை அரசாங்கம் செய்து வரும்” என்றார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...