tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா பற்றிய அரசியல் செய்திகள் ஆதாரமற்றவை

Share

சந்திரிக்கா பற்றிய அரசியல் செய்திகள் ஆதாரமற்றவை

சந்திரிகா தொடர்பில் இந்நாட்களில் வெளிவரும் அரசியல் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அவரது அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மையில் வெளிவந்த செய்திகளை மறுத்துள்ள அவர், தாம் இதுவரையில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு வழங்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறிப்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுஜன முன்னனி கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளையும் மறுத்துள்ளார்.

இந்நிலையில்,இந்த ஆண்டு இறுதியில் இலங்கை முக்கியமான தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் உச்சகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் இந்த அறிவிப்பை சந்திரிக்கா விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் எதுவும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்பதை தம்மால் கூற முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...