16 2
இலங்கைசெய்திகள்

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளில்…நாடாளுமன்றில் எழுந்த கேள்வி

Share

கடும் குற்றச்சாட்டுகள் கொண்ட அதிகாரிகள் உயர் பதவிகளில்…நாடாளுமன்றில் எழுந்த கேள்வி

கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற முஜுபுர் ரஹ்மான் (Mujibur Rahman) கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாவறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு தெரிவித்துள்ளதாவது, “ஒரு நாடாக, நாம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கை என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல முடியவில்லை.

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற அண்டை நாடுகள் அவற்றின் பன்முகத்தன்மை மற்றும் மரியாதை காரணமாக முன்னேறியுள்ளன.

76 ஆண்டுகளாக தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசி வருகிறோம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த விடயத்திற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பேற்க வேண்டும்.

அரசாங்கம் மிகவும் அரிதான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது, ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவுக்கு இவ்வாறானதொரு மக்கள் ஆணை கிடைத்தது.

ஆனால் அவராலும் இந்த பன்முகத்தன்மையைப் புரிந்துகொண்டு முன்னேற முடியவில்லை, நீங்கள் ஒரு நல்ல பயணத்தை நடத்த சட்டத்தின் ஆட்சியை நிறுவ தயாராகி வருகிறீர்கள்.

ஆனால், உயர் பதவிகளில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகளை நியமித்து எப்படி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியும்.” என்றார்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...