19 22
இலங்கைசெய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் மாற்றமா!

Share

தேசிய மக்கள் சக்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிக்கப் போவதாக அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

2022 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கில் பேசுவதற்கு, தேசிய மக்கள் சக்தி, தம்மை அழைத்ததை எம்.ஏ.சுமந்திரன் நினைவு கூர்ந்துள்ளார்.

எனினும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யத் தேவையில்லை என்று தேசிய மக்கள் சக்தி, இப்போது கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேச அழைத்த திசைக்காட்டி, தற்போது திசையை இழந்துவிட்டதாகத் தெரிகிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...