18 5
இலங்கைசெய்திகள்

இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Share

இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும் போது, அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய அட்டையை கோரும் உரிமை பொது மக்களுக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவாமுல்ல சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் பணப்பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பொருட்கள் மீள வேண்டுமென்றால் 35 ஆயிரம் ரூபாயுடன் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸாரின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடையவர்களே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...

images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...