tamilni 73 scaled
இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

Share

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் 100,000 பேர் அனைத்து விதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாகவும், ஆனால் வருடாந்தம் 4700 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அது நியாயமானதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கந்தகாடு மையத்தில் நடந்ததைப் போன்று முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...