tamilni 73 scaled
இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

Share

போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக புனர்வாழ்வு நிலையங்கள்

போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும்.

போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

நாட்டில் 100,000 பேர் அனைத்து விதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாகவும், ஆனால் வருடாந்தம் 4700 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அது நியாயமானதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கந்தகாடு மையத்தில் நடந்ததைப் போன்று முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...