கொழும்பில் பத்து கோடி ரூபா மருந்துகளுடன் சிக்கிய நபர்
கொழும்பின் புறநகரான வத்தளையில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் Pregab 150 mg 192,000 மாத்திரைகளுடன் நபர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.