2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
2016 ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) இலங்கைக் கடல் பகுதியில் நடத்திய சோதனையின் போது பதினேழு சந்தேக நபர்கள் 111.82 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்தேகநபரான பாகிஸ்தானியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபர் பிணை நிபந்தனைகளை கடைபிடிக்கத் தவறிய நிலையில், உயர் நீதிமன்றில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் தேடப்படும் நபரைக் கைது செய்வதில் காவல்துறைக்கு உதவ 071-8591881 அல்லது 011-2343333 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.