18 24
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Share

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது அவதானமாகச் செயற்பட வேண்டும் என சாரதிகளுக்கு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதனை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் வழமையாக அதிகளவில் விபத்துக்கள் இடம்பெறுவதனால் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் (Hatton) மல்லியப்பு பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் சாரதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமரா அமைப்பினூடாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 53 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...