7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

Share

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில் செலுத்துமாறு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் 6 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுராதபுரம்(Anuradhapura) தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு இந்த சம்பவம் பதிவானது.

சம்பவம் நடந்த நேரத்தில் 27 வயதுடைய தகவல் தொடர்பு மைய இயக்குநரான, மனுதாரர், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவின் மீது இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டு உத்தரவுக்கு மேலதிகமாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறும் உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் மொத்த இழப்பீட்டுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம், பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.

மனுதாரர் சுசில் பிரியங்க செனவிரத்ன, தம்புத்தேகம பொலிஸாரின் நடத்தைக்கு எதிரான போராட்ட ஊர்வலத்தில் பங்கேற்றதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டதாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்ப்பு நேற்றையதினம்(23) வழங்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...