24 665d49abaf997
இலங்கைசெய்திகள்

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

Share

மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு..!

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பத்தொன்பது வயது இளைஞன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அதிவேகமாக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி துரத்திச்சென்று காவல்துறையினரால் மோட்டார் சைக்கிளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு மத்தியிலும் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றதாகக் கூறப்படும் இளைஞன், மோட்டார் சைக்கிளை தன்னுடன் எடுத்துச் சென்று பின்னர் சூரியவெவ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சிகிச்சைக்காக காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....