tamilnivv 3 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸாரின் சர்ச்சைக்குரிய கைது நடவடிக்கை

Share

குருநாகலில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யும் போது இரண்டு அதிகாரிகள் பலத்தை பயன்படுத்துவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த காணொளியில் இரண்டு பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை தரையில் கிடத்தி கயிற்றால் பிணைப்பது காட்டப்படுகிறது.

இதன்போது ஒரு அதிகாரி சந்தேக நபரின் மீது அமர்ந்துள்ளார், மற்றவர் சந்தேக நபரின் கால்களை கயிற்றால் பிணைக்கிறார்.

இந்தநிலையில் டிசம்பர் 26 ஆம் திகதி குருநாகல் டோரடியாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டுகள் என சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சந்தேகநபரை கைது செய்ததாக அவர் கூறியுள்ளார்.

காணொளியில் காட்டப்படுபவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு தினசரி ஈடுபட்டு வந்தவராவார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரின் வசம் 2 கிராம் ஹெராயின் இருந்தது. கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள், அவரைத் தாக்க முற்படவில்லை” என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1558586293 jaffna university 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை முறையற்றுப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: பதிவாளர் வி. காண்டீபன் கடும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையை (Logo) அனுமதி இன்றி பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அவ்வாறு...

Development officers protest
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஐந்தாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்: உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தங்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சாகும் வரையிலான உண்ணாவிரதப்...

cbsn fusion trump says killing in iran is stopping thumbnail
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் போர் அபாயம்: ஈரான் – அமெரிக்கா மோதலைத் தவிர்க்க துருக்கி மற்றும் அரபு நாடுகள் தீவிர முயற்சி!

மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே...

25 678c45533b657
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காவல்துறை அதிகாரிகளின் சம்பளம் போதுமானதாக இல்லை: 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க IG பிரியந்த வீரசூரிய திட்டம்!

காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய சம்பளம், அவர்கள் செய்யும் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு போதுமானதாக இல்லை...