8 18
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

Share

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பெப்ரவரி 08 ஆம் திகதி இரவு பணிக்குச் சென்றபோது, துப்பாக்கியையும் தோட்டாங்களையும் எடுத்து சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேகநபரான உத்தியோகத்தர், அன்றிரவே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த அதிகாரியை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி இன்னும் மீட்கப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...

20 26
இலங்கைசெய்திகள்

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் திட்டம் தோல்வி

வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காணி உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பை அடுத்து,...

images 1 1
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும்...