8 18
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

Share

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பெப்ரவரி 08 ஆம் திகதி இரவு பணிக்குச் சென்றபோது, துப்பாக்கியையும் தோட்டாங்களையும் எடுத்து சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேகநபரான உத்தியோகத்தர், அன்றிரவே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த அதிகாரியை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி இன்னும் மீட்கப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...