8 18
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

Share

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பெப்ரவரி 08 ஆம் திகதி இரவு பணிக்குச் சென்றபோது, துப்பாக்கியையும் தோட்டாங்களையும் எடுத்து சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேகநபரான உத்தியோகத்தர், அன்றிரவே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த அதிகாரியை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி இன்னும் மீட்கப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...