இலங்கைசெய்திகள்

தாய் மகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்: சந்தேகநபரை மடக்கி பிடித்த பொலிஸார்

24 667b6a3d41a43 30
Share

தாய் மகள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்: சந்தேகநபரை மடக்கி பிடித்த பொலிஸார்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் தாய், மகள் இருவரையும் கத்தியால் தாக்கி விட்டு ஹபாயா அணிந்து தப்பிக்க முயன்றவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (26)மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தாக்குதளுக்கு உள்ளன தாய் (54) ,மகள் (31) இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், தாய் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும், மகள் கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஈச்சநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடனுக்கு பணம் வாங்கிய நிலையில், அதனை மீளப் பெறுவதற்காக தாக்குதலுக்கு உள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.

இதனை பொருட்படுத்தாது உரிய தாயின் வீட்டுக்கு சென்று கத்திக்குத்து தாக்குதலை நடாத்தி விட்டு தப்புவதற்கு முயன்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபர் முகத்தை மூடி ஹபாயா அணிந்து தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....