19 9
இலங்கைசெய்திகள்

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

Share

மாவீரர் நினைவேந்தல் : தொடரப்போகும் கைதுகள்

வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏழு சட்டவிரோத மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால(Tilak Dhanapala) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களை கைது செய்வதற்கு வசதியாக அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்த நபர்கள் குறித்த அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்த ஏழு நிகழ்வுகளில் நான்கு நிகழ்வுகள் பருத்தித்துறை(point pedro) பிரதேசத்திலும், இரண்டு கிளிநொச்சியிலும்(kilinochchi), ஒன்று யாழ்ப்பாணத்திலும்(jaffna) இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஏற்பாட்டாளர்கள் தொடர்பான தகவல்கள் காணொளிப் பதிவுகள் மற்றும் தகவலறிந்தவர்கள் மூலம் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிடியாணையை பெறுவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களிலும் காவல்துறையினர் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால்( Shivajilingam) ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...