24 6663d13fbd60f
இலங்கைசெய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

Share

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

கடந்த நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான முரண்பாடான தகவல்களையடுத்து வீதியில் பயணிக்கும் போது கட்டாயம் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் தொடர்பில் பொலிஸார் மீள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அனைத்து சாரதிகளும் சாதாரண வாகனங்களுக்கு 4 ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் அல்லது ஹைட்பிரிட் வாகனங்களுக்கு மட்டும் 3 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் கனரக வாகனங்களுக்க 5 ஆவணங்கள் தேவைப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.

ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்றிதழ் மற்றும் அதன் நகல் (புகைப்பட நகல் கண்ணாடியில் ஒட்டப்பட வேண்டும்), வாகன காப்பீட்டு சான்றிதழ், வாகன உமிழ்வு சான்றிதழ் ஆகியவை கட்டாய ஆவணங்களாகும்.

மேலும் கனரக வாகனங்களுக்கு மட்டும் வாகனத் தகுதிச் சான்றிதழ் தேவையாகும். வாகனத்தில் பயணிக்கும் போது சிலர் வாகனப் பதிவுச் சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என பொலிஸ் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில் வாகனத்தை எடுத்துச் செல்வது தொடர்பான சம்பவத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் அது அவசியம் என தவறாகத் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் இதனை தெளிவுப்படுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...