tamilni 104 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்பரப்பில் நச்சுத்தன்மை மிக்க மீன்

Share

இலங்கை கடற்பரப்பில் நச்சுத்தன்மை மிக்க மீன்

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தவகை பாறை மீன்கள் கடித்து பலர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பல செய்திகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் கூறுகையில்,

‘கோன்மஹா-ஸ்டோன் ஃபிஷ்’ ‘(Gonmaha-Stone Fish) என நச்சு மீன் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மீன்கள் இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள பகுதிகளில் காணப்படும்.

இந்த மீன்களின் மெதுவான இயக்கம் காரணமாக அவை சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு அருகில் வரும் அதேநேரம் மீனின் முதுகில் உள்ள முதுகெலும்புகள் விஷம் கொண்டது.

இதனால் கடலில் குளிக்கும் போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...

16 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: காரில் தப்பியோடிய கும்பலுக்கு வலைவீச்சு!

யால தேசிய பூங்காவிற்கு உட்பட்ட கிரிந்த, ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்புச் சாவடிக்கு அருகாமையில் இன்று (மார்ச்...