tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Share

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

வடமேல் மாகாண கடலோர பகுதிகளில் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

வடமேல் கடற்பகுதியில் இந்த நாட்களில் ஜெல்லிமீன் இனங்கள் அதிகமாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்..

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீனைத் தொட்டால் உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்படுவதுடன், காயங்களும் ஏற்படுவதாகவும், மிகவும் வேதனையான சூழல் நிலவுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரவில வளைகுடாவில் அதிகளவான ஜெல்லிமீன்கள் வலையில் சிக்குவதால் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடற்கரையில் விளையாடுபவர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...