rtjy 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

Share

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும் என 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் சம்பிரதாய கட்சிகளுக்கு மக்கள் எழுச்சியுடன் முடிவு கட்டப்பட்டுள்ளது. அக்கட்சிகளின் உறுப்பினர்கள் என்னதான் நினைத்தாலும் மக்கள் ஆணை இனி கிடைக்கப்போவதில்லை.

2022 ஜூலை 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமல்ல சம்பிரதாய கட்சிகளும் அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டன. எதிர்க்கட்சியும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.

இதனால்தான் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர் மற்றும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை.

2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் மொட்டு கட்சிக்கு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...