rtjy 79 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் 7 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்

Share

கொழும்பில் 7 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்

கொழும்பில் உள்ள ஏழு இடங்கள் மீது ஐ.எஸ். குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம் இருப்பதாக அரச பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கும், நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மைத்தன்மையைச் சரியாக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று(06.10.2023) உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் இந்தத் தாக்குதல் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாரதூரமான விடயம் என்பதால், இதன் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது என்பதால் கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்று இந்த அபாயம் குறித்து ஆராய வேண்டும்.

அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாட்டின் சட்டத்தினுள் இயன்ற உச்சபட்ச நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...