6 27
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் சிக்கி இருவர் பலி: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Share

கோர விபத்தில் சிக்கி இருவர் பலி: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பிடிகல – நியாகம வீதியின் மட்டக்க பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் பிடிகல பிரதேசத்தில் வசிக்கும் மரக்கறி வியாபாரியும் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த பெண்கள் இருவரும் உயிரிழந்தவரின் உறவினர்கள் எனவும், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் எல்பிட்டிய வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...