இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு பதில் கூற மறுத்த பிள்ளையான்

Share

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற மறுப்பு தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களை பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பார்வையிட வருகை தந்துள்ளார்.

இதன்போது தனது விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்கூற சிவனேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஊடகங்கள் அங்கேயும், இங்கேயும் சிறுசிறு துண்டுகளாக எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றது. தான் பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்க முடியும், ஆனால் உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பண்ணையாளர்களுக்கு மத்தியில் ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...