இலங்கைசெய்திகள்

ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்!

ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்!
ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்!
Share

ஆயுதத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீறியோடை வாவிப்பகுதியில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்டுள்ள சம்பவம் மற்றும் மீன் வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் வாவியை மறைத்து மீன் வளர்க்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் பிரதேச மக்களின் குற்றச்சாட்டிற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்திருந்தனர்.

இதன்போது அப்பகுதி இளைஞரொருவர் கூறுகையில், பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு அனைவருக்கும் பயம்.

நாங்கள் பிரச்சினைகளை சொல்வதால் எங்களுக்கு பிரச்சினைகள் வரும். எமக்கு எதாவது நடந்தால் இவர்கள் தான் காரணம்.

நிசா, ரொனி, கிசோத்குமார், பைசல் ஆகியோரே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் துப்பாக்கிகளுடன் இருக்கும் புகைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொக்கு சுடுவதற்காக இந்த ஆயுதம் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதிலும் எதிர்காலங்களில் மனிதர்களையும் வேட்டையாடலாம் என மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசியல் கட்சியொன்றின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினராக இருந்தவர்கள் இவ்வாறு ஆயுதங்களுடன் காட்சியளிப்பது பீதியை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றதாகவும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொக்குகள் மீது பாயும் குண்டுகள் மனிதர்கள் மீது பாய்வதற்கு முன் துரிதகதியில் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...