16 25
இலங்கைசெய்திகள்

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

Share

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அநுரவின் புகைப்படம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மாத்திரம் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இட்ட பதிவொன்றின் மூலமே அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சுவரில் சுதந்திர இலங்கையின் அனைத்து அரச தலைவர்களின் புகைப்படங்களும் அண்மைக்காலம் வரை கௌரவமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் மட்டுமே இருப்பதாக அவர் குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அலுவலகம் ஒரு கட்சி அலுவலகம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையின் முன்னாள் அரசத்தலைவர்களான டி.எஸ்., டட்லி, சேர் ஜோன், பண்டாரநாயக்க, தஹநாயக்க, சிறிமாவோ, ஜே.ஆர், பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, மகிந்த, மைத்திரிபால, கோட்டாபய, ரணில் போன்றோரின் வரிசையில் இருப்பதற்கு அநுரவும் தகுதியானவர் என கூறிய தென்னகோன், அநுரவை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...