Savings Accounts 2021.11.26 768x401 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உங்க அடையாள அட்டையில 6 லட்சம் கடன்!: திருகோணமலையில் நூதன பணமோசடி – பெண் ஒருவர் ஒரு லட்சத்தை இழந்தார்!

Share

வங்கிக் கடன் மற்றும் பொலிஸ் விசாரணையைக் கூறி அச்சுறுத்தி பணமோசடி செய்யும் கும்பலிடம் சிக்கி, திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாயை இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்புவழிபுரத்தைச் சேர்ந்த பெண்ணின் தொலைபேசிக்கு கடந்த திங்கட்கிழமை (05) பிற்பகல் மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தங்களை தனியார் வங்கி ஊழியர்கள் என அடையாளப்படுத்திய அவர்கள், “உங்கள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பாதாள உலகக் குழுவினர் (செவ்வந்தி கும்பல்) 6 இலட்சம் கடன் பெற்றுள்ளனர்” எனக் கூறி பயமுறுத்தியுள்ளனர்.

பின்னர் FCID இன்ஸ்பெக்டர் பாலசூரிய மற்றும் ASP ராஜரத்னம் ஆகிய பெயர்களில் சிலர் பொலிஸார் போலக் கதைத்து, “உங்களைக் கைது செய்யப் போகிறோம், தப்பிக்க வேண்டுமானால் உடனடியாகப் பணம் செலுத்துங்கள்” என மிரட்டியுள்ளனர். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகத் தொலைபேசியைத் துண்டிக்க விடாமல் அப்பெண்ணைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அச்சமடைந்த அந்தப் பெண், தனது நகைகளை அடகு வைத்து ஒரு இலட்சம் ரூபாயை மர்ம நபர்கள் வழங்கிய மக்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

வேலையை விட்டு வீடு திரும்பிய கணவரிடம் விபரத்தைக் கூறிய பின்னரே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் பின்வரும் உண்மைகள் தெரியவந்துள்ளன.

மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கு வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரின் பெயரில் 3 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கிற்கு ஒரு நாளைக்கு 5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை வைப்பிலிடப்படுவதும், அது உடனுக்குடன் வேறொரு கணக்கிற்கு மாற்றப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னரும், அந்த மர்ம நபர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொலைபேசி ஊடாகத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

இனம் தெரியாத நபர்கள் தொலைபேசியில் வங்கி ஊழியர்கள் அல்லது பொலிஸார் எனக் கூறி அச்சுறுத்தல் விடுத்தால், பதற்றமடையாமல் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறும், எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாதவர்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...