2 31
இலங்கைசெய்திகள்

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

Share

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் இன்று காலைவரை திரும்பி வராததால் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...