8 35
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் தீக்கிரையாக்கப்பட்ட நபர்! கொலையில் அதிர்ச்சி பின்னணி

Share

களுத்துறை – புளத்சிங்கள நாகஹதொல் பகுதியில் ஒருவர் தீவைத்து படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட நபர் மஹிங்கல – பாதுக்கை பகுதியைச் சேர்ந்த அமரசிங்க பந்துல நிஷாந்த என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இறந்தவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாலையின் அருகே முகம் குப்புறக் கிடத்தப்பட்டு, அதன் மீது டயர்கள் பொருத்தப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவரின் தலையில் பலத்த வெட்டுக் காயம் இருந்ததாகவும், அவரது தொடையிலிருந்து மார்பு வரை டயர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியும், மரணம் நடந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில் இருந்து, இறந்தவர் இன்று (28) காலை 10.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வந்து சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், மேலும் மத்துகம நீதவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68391c518038f
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் விரைவில் கைச்சாத்திடும் இலங்கை

அமெரிக்கா, இலங்கை மீது விதித்த கட்டணக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான, இரண்டாவது உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வோசிங்டனில்...

25 6839329e68755
உலகம்செய்திகள்

அமெரிக்காவின் சிறப்பு தூதர் முன்கொணர்ந்த ஒப்பந்தம்: ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் முன்கொணர்ந்த ஒப்பந்தத்தை...

25 68392050e9f7e
இலங்கைசெய்திகள்

மீண்டும் 16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் 16 பொறுப்பதிகாரிகளுக்கு, உடனடி இடமாற்றங்களை இலங்கை பொலிஸ் தலைமையகம்...

25 68392036c28da
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில்...