3
இலங்கைசெய்திகள்

பொலிஸாரால் தேடப்படும் முக்கிய நபர் சரணடைவார்: ஜனாதிபதியின் நம்பிக்கை

Share

பொலிஸாரால் தேடப்படும் முக்கிய நபர் ஒருவரை தற்போது காணவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை விட்டுவிட்டு தனது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த நபர் நாளைக்குள் சரணடைவார் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் நேரடியாக சந்தேக நபரின் பெயரைக் குறிப்பிடவில்லை. எனினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவர் குறிப்பிட்டதாக பரவலாக ஊகிக்கப்படுகிறது.

முன்னதாக, வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தென்னகோனைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில், ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையது, குறித்த சம்பவத்தின் போது ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், வழக்கில் சந்தேக நபர்களான, தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பொலிஸ் அதிகாரிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 2025 11 11T193051.794
செய்திகள்உலகம்

ஆப்பிள் X இஸ்ஸி மியாகே இணையும் ‘iPhone Pocket’: 3D-பின்னல் தொழில்நுட்பத்தில் 8 நிறங்களில் நவம்பர் 14இல் உலகளவில் அறிமுகம்!

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனமும், ஜப்பானிய ஃபேஷன் நிறுவனமான இஸ்ஸி மியாகேவும் (ISSEY MIYAKE) இணைந்து...

69119dd9ad62e.image
செய்திகள்உலகம்

தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளிப் பாதிப்பு: 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்; பாடசாலைகள் மூடல்!

தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளியைத் தொடர்ந்து, 8,300க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக...

17597546 bridge
செய்திகள்உலகம்

சீனாவில் திடீர் அதிர்ச்சி: சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஹொங்கி பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது! – கட்டுமானத் தரம் குறித்துக் கேள்விகள்!

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே திறக்கப்பட்ட ஹொங்கி பாலத்தின் (Hongqi Bridge) பெரும்பகுதி நேற்று...

9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...