24 663d785e22914
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்

Share

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம்

காலியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரும் படுகாயமடைந்துள்ளதாக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

அக்மீமன, குருந்தகந்த, தோட்டகொட பகுதியைச் சேர்ந்த ஹிக்கடுவ கோரலகேயைச் சேர்ந்த பிரசன்ன குமார என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கொலையின் பின்னர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரனையும் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...