rtjy 302 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

Share

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

யாழில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அவரை, நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் புறப்படும் முனையத்தின் ஊடாக பதுங்கியிருந்து மும்பை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு வரிசையில் அனுமதிக்காக காத்திருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், அந்த வழியாக பயணி ஒருவர் தந்தேகத்துக்கிடமான முறையில் செல்வதை அவதானித்தே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்ட போது அவரை கண்டறிய முடியவில்லை. பின்னர், சிசிரிவி பதிவுகளில் இருந்து பயணியை அடையாளம் கண்டு, அவரது கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டு அனுமதி போன்ற கணினி மயமாக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போதே அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்ட நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விமானம் ஏற்கனவே இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததால், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்ட பயணி குறித்து மும்பை விமான நிலையத்தின் செயல்பாட்டு மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...