rtjy 302 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

Share

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது

யாழில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அவரை, நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் புறப்படும் முனையத்தின் ஊடாக பதுங்கியிருந்து மும்பை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு வரிசையில் அனுமதிக்காக காத்திருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், அந்த வழியாக பயணி ஒருவர் தந்தேகத்துக்கிடமான முறையில் செல்வதை அவதானித்தே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்ட போது அவரை கண்டறிய முடியவில்லை. பின்னர், சிசிரிவி பதிவுகளில் இருந்து பயணியை அடையாளம் கண்டு, அவரது கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டு அனுமதி போன்ற கணினி மயமாக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போதே அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்ட நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விமானம் ஏற்கனவே இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததால், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்ட பயணி குறித்து மும்பை விமான நிலையத்தின் செயல்பாட்டு மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...