images 4 1
இலங்கைசெய்திகள்

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மண்ணில் புதையுண்ட நபர்!

Share

பதுளை, ஹாலி எல, பகுதியில் மண்ணில் புதையுண்ட நபரொருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஹாலி எல, போகஹமதித்த பகுதியில் இன்று (26.05.2025) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் வீடொன்றுக்கு அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

குறித்த நபர் மதிலை தடுத்து சரிந்து விழுந்துகிடந்த மண் மேட்டை அகற்றிக் கொண்டிருந்த போது மண்ணில் புதையுண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேவாசிகள், பொலிஸார், தீயணைப்புப் படை வீரர்களின் ஒரு மணித்தியாலம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் பின்னர் மண்ணில் புதையுண்ட நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட நபர் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...