tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

Share

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம்

முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர் எனினும், அரசு இது தொடர்பில் கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சில முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த முன்பள்ளி நிர்வாகங்கள் சிறிதளவு ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது. சில ஆசிரியர்களுக்கு கல்வி திணைக்களம் 6000 ரூபாய் ஊக்குவிப்பு பணத்தினை வழங்குகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், குறித்த ஆசிரியர்கள் சிறப்பான கல்வி வழங்குவதிலும் தமது பொருளாதாரத்தை கொண்டு செல்வதிலும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றார்கள் என மேலும் தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் நீண்ட காலமாக இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து வருகின்றனர்.

அவர்கள் தமது பிரச்சினையை ஒரு அணியாக அல்லது குழுவாக பலரிடத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் காலத்தில் அவர்களுக்கு தீர்வு வழங்குவதாக அரசியல் பிரமுகர்களினால் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டு குறித்த விடயம் தொடர்பில் பேசுவார்கள்.

ஆனால் குறித்த தேர்தல்கள் இடம்பெற்று தேர்தல் காலங்கள் முடிந்த பிறகும் அவர்களின் வேண்டுகோள் நிறைவேற்றப்படுவதில்லை. எனவே அரசாங்கம், அரசாங்கம் முன்பள்ளி ஆசிரியர்களின் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...