tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

Share

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்! நாடு திரும்பினார் பசில்

அமெரிக்காவில் உள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலை முன்னிட்டு சில முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அவர் இலங்கைக்கு திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பியதை தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அதிபர்த் தேர்தலின் போது, இறுதித் தறுவாயில் தனது கட்சி வேட்பாளரை அறிவித்ததாக அவர் நினைவூட்டியுள்ளார்.

அத்துடன், தனது கட்சி கடந்த காலங்களில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருந்தாலும், தற்போது நடைபெறவுள்ள அதிபர்த் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான பலம் இருப்பதாக எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

இலங்கையில் அதிபர்த் தேர்தல் நடைபெற மேலும் சில மாதங்கள் இருந்தாலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மேற்கொள்ள கட்சி மேலும் தாமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...