20211209 114614 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காணி சுவீகரிப்புக்கு துணைபோகும் மக்கள் பிரதிநிதிகள்!

Share

மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

யுத்தத்தின் பின்னரும் மக்களிடம் உறுதிப்பத்திரங்களை மிரட்டி சுவீகரித்துக் கொள்கின்றனர்.

பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் இதற்கு தொடர்ச்சியாக கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இச்சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. இது எமக்கான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.

காணி சுவீகரிப்பு சார்ந்த விடயங்கள் நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தளங்களிலும் பேசுபொருள் ஆக்கப்படாமை படையினருக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளதாக மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் மேலும் தெரிவித்தார்.

மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் கரையோர மக்களின் காணிகளை கடற்படையினரும் இராணுவத்தினரும் ஆக்கிரமிப்பதற்கு அரச அதிகாரிகள் துணை போவதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இரட்ணசிங்கம் முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...