rtjy 358 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியினால் மொட்டு கட்சியின்மேல் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்

Share

 

ஜனாதிபதியினால் மொட்டு கட்சியின்மேல் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக, பொதுஜன பெரமுன கட்சியின் மீது மக்கள் அதிருப்தியை கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள், நாமல் ராஜபக்சவின் தலைமையில் சந்தித்து கலந்துரையாடினர்.

மலலசேகர மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மக்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு, தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை என அவர்களால் இதன்போது முறைப்பாடு செய்யப்பட்டது.

மாறாக, சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட மேலும் ‘சீர்திருத்தங்களை’ செயல்படுத்துவதன் மூலம் அவர், மக்களுக்கு துயரத்தையே வழங்கி வருகிறார் எனவும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கட்சியே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கணிசமான நிவாரணம் வழங்கவில்லை என்றால், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கக் கூடாது என்று சிலர் கருத்துக்கூறினர்.

இறுதியில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்னள், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் ஆலோசனைகளை பெற்று செயற்படுமாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...