Mahindananda Aluthgamage Anticipatory Bail
இலங்கைசெய்திகள்

மகிந்தானந்தவின் கைதினை வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்

Share

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம்(Carrom) மற்றும் தாம்(Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாவலப்பிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தானந்த, தனது பிறப்பிடமான நாவலப்பிட்டி தொகுதியில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...