இலங்கைசெய்திகள்

நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி! ரோஹினி கவிரத்ன ஆதங்கம்

21 3
Share

நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி! ரோஹினி கவிரத்ன ஆதங்கம்

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனவை நிறுத்தியது, மூத்த குடிமக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி என மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், ”ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவை வழங்காமல் இடைநிறுத்தியது.

இதன்படி ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஓய்வூதியதாரர்கள் 9,000 ரூபாவை இழந்துள்ளனர். அக்டோபர் ஓய்வூதியத்துடன் உரிய பணம் வழங்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஓய்வூதிய நாளில் பணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுத்தேர்தல் முடியும் வரை பணம் வழங்குவதை நிறுத்தி வைத்தால், ஓய்வூதியர்கள் நான்கு மாத கொடுப்பனவாக 12,000 ரூபாவை இழக்க நேரிடும்.

மேலும், பொதுத் தேர்தலின் முடிவில் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.”என்றும் அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...