கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!

Share

கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!

பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (26.07.2023) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பேலியகொட பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நேற்று (25.07.2023) நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (3) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும், அந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பேலியகொட மெனிங் சந்தையிலுள்ள கடைகளை வெளியாட்களுக்கு வழங்குவதாக குற்றம் சுமத்தி, பொது சந்தை சங்கம் இன்று (26) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெலிஸார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்தே மேற்கண்டவாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...