tamilni 214 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி!

Share

ரணில் அரசாங்கத்தின் புதிய முயற்சி!

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”இன்னமும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்வதற்காக ஜனாதிபதி முறைமையையே இல்லாது செய்ய அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகிறது.

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்தால், 2025, ஆகஸ்ட் வரை பொதுத் தேர்தலை நடத்த வேண்டியதில்லை.

அப்படியானால், இன்னமும் இரண்டு வருடங்களுக்கு இந்த அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கலாம். 2024, செப்டம்பர், அக்டோபரில் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலையே இல்லாது செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...