3 21
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு

Share

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு

இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் (The People for Equality and Relief in Lanka (பேர்ல்) அமைப்பு, புதிய ஒரு சட்ட விளக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், 2009 இல் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு நிரூபித்துள்ளது.

ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2009 ஜனவரி முதல் மே 18 வரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அட்டூழியங்களை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ மொழியில் மூடிமறைத்தது மற்றும் காசா உட்பட இதேபோன்ற இனப்படுகொலைச் செயல்களுக்கு வழி வகுத்தது” என்று பேர்லின் நிறைவேற்று இயக்குநர் மதுரா ராசரத்தினம் கூறியுள்ளார்.

எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் கூறிவரும், 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை முறையாக அங்கீகரிக்குமாறு பேர்ல் அமைப்பு, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை தமது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இனப்படுகொலைகளின் மிகவும் பொறுப்பான குற்றவாளிகளில் ஒருவரான, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, “விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் மட்டுமே” இறுதி யுத்தத்தின்போது “எதிர்ப்பு மண்டலத்தில்” இருப்பதாகக் கூறியிருந்தமையானது, இனப்படுகொலைக்கான சாத்தியத்தை நிரூபிப்பதாகவும் பேர்லின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...